மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

கடந்த ஜூல் 12 ஆம் தேதி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்காக  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. 

மேலும், வெள்ளிக்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலின் குணமடைந்து வருவதாகவும் இன்னும் சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, மருத்துவமனையில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் சென்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு முதல்வர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com