இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

News image
கடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி
Updated On :27 ஜூலை 2022, 4:45 am

DIN


சிதம்பரம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது .

மேலும், கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூருக்கு வந்த அதிக அளவு நீரால் அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறையினர் கடந்த 15 ஆம் தேதி காவிரியில் உபரி நீரை வெளியேற்றினர். 

இதனைல் கல்லணை வந்தடைந்த உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு ஜூலை 17 ஆம் தேதி வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவான 9 அடி தேக்கப்பட்டு உபரி நீர் வினாடிக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கன அடி வீதம் ஜூலை 19 ஆம் தேதி கடலுக்கு அனுப்பப்பட்டது. 

Story image

முழு கொள்ளளவை எட்டிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி.

மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரியை முழுவதுமாக நிரப்பதற்கு முடிவு செய்து ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தொடர்ந்து கடந்த ஐந்து நாள்களாக அனுப்பினர். இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதாவது 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. 

விவசாய பணிகள் இந்த பகுதியில் தொடங்கப்படாததால் சென்னைக்கு மட்டுமே வினாடிக்கு 63 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 2005 கன அடி வீதம் தண்ணீர் கீழணையிலிருந்து தண்ணீர் வருகிறது. ஏரியிலிருந்து விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் பட்சத்தில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலஙகள் பயன் பெறும் என கூறப்படுகிறது. 

தற்போது கீழணையில் 9 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. வடக்கு ராஜன் வாய்க்காலில் 150 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்கால் 150 கன அடியும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள கடலுக்கு வினாடிக்கு 8,983 கன அடி தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து கடந்த ஐந்து நாள்களாக காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை, கீழணை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.