தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மகிழ்ச்சியான செய்தி: சரிவிலிருந்து மெல்ல மீளும் மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,410 கன அடியாக அதிகரித்துள்ளது. 

News image
மகிழ்ச்சியான செய்தி: சரிவிலிருந்து மெல்ல மீளும் மேட்டூர் அணை நீர்மட்டம்
Updated On :7 ஜூன் 2022, 7:45 am

DIN

சேலம்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,410 கன அடியாக அதிகரித்துள்ளது. 

 நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 114.63அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 114.75 அடியாக உயர்ந்துள்ளது.

Story image

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,417 அடியிலிருந்து வினாடிக்கு 10,410 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.34 டி.எம்.சியாக உள்ளது.

Story image

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.