சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் காலாவதி மருந்துகள் கொட்டப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், நான் ஆய்வு செய்தேன். இதுபற்றி விசாரணை நடத்த இணை இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இரு நாள்களில் விசாரணை அறிக்கை வந்ததும், சம்பந்தப்பட்டவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனையை மேம்படுத்த ரூ.10 கோடி செலவில் ஒருங்கிணைந்த தாய் சேய் நல மையம் அமைப்பது, ரூ.42 கோடியில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்களை கட்டுவது போன்ற பணிகள் தொடங்கப்படவுள்ளன.