வேலூரில் கடந்த ஓராண்டில் மட்டும் 12 பால் பண்ணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில், ரூ.82.10 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ.32.9 கோடி மதிப்பில் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவில் என்னை இளைஞராக பார்த்த துரைமுருகன் இன்று என்னை தலைவராக பார்க்கிறார்.
அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். அனைத்து மக்களும் முன்னேற வேண்டும்.
வேலூரில் கடந்த ஓராண்டில் 12 பால் பண்ணைகள் கட்டப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.