ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

'விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி' - பேரறிவாளனின் தந்தை நெகிழ்ச்சி

பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார். 

News image

தந்தை குயில்தாசன், தாய் அற்புதம்மாளுடன் பேரறிவாளன். 

Updated On :18 மே 2022, 4:51 pm IST

பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார்.  

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. 

அதன்படி, 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், 'பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி' என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.