திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது ஆடை தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது ஆடை தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருள்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே, நூல் விலையை குறைக்க தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில், நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் ரூ.40 குறைந்த நிலையில் நடப்பு மாதத்திலும் ரூ. 20 குறைந்துள்ளது தொழில் துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com