விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்: ஓபிஎஸ்

தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது:

பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து சுற்றுப்பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணியும், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பட்டியல் வெளியிட்டவுடன் மாவட்ட வாரியாக உறுதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com