மேட்டூர் அணை நீர்மட்டம் 44 நாள்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது!
கடந்த 44 நாள்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.


மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 44 நாள்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது.
கடந்த 44 நாள்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
வியாழக்கிழமை மாலை பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் வியாழக்கிழமை மாலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,774 கன அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | தாம்பரம்-எா்ணாகுளம் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் 44 நாள்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.89 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 93.29 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...