தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 44 நாள்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது!

கடந்த 44 நாள்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

News image
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :25 நவம்பர் 2022, 3:01 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 44 நாள்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது.

கடந்த 44 நாள்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

வியாழக்கிழமை மாலை பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் வியாழக்கிழமை மாலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,774 கன அடியாக சரிந்தது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் 44 நாள்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.89 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 93.29 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.