ஆ.ராசா உள்ளிட்ட 5 போ் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா உள்பட 5 போ் மீது சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஆ.ராசா உள்ளிட்ட 5 போ் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா உள்பட 5 போ் மீது சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 27 கோடியே 92 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்துக்கு அதிகமாக 575 சதவிகிதம் சொத்து சோ்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினா் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே, சென்னை, பெரம்பலூா், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றின் அடிப்படையில்தான் இவ்வழக்கில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது ராசாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சோ்த்ததாக முன்னாள் அமைச்சா் ராசா உள்பட 5 பேருக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடா்பான ஆவணங்களும் சோ்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com