கடும் பனிமூட்டம்: தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு!

கடும் பனிமூட்டம்: தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு!

தூத்துக்குடியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. 


தூத்துக்குடி: தூத்துக்குடியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் வியாழக்கிழமை காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் காலை 6.20 மணிக்கு 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் வானிலே சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

வானிலை சீராகாத காரணத்தால் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை சீரான பின்னரே விமான சேவை சீரடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com