/

சீர்காழி அருகே அனைத்து மதத்தினரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாட்டம் 

சீர்காழி அருகே அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடினர்.

News image
சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் அனைத்து மதத்தினரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:07 am

DIN

சீர்காழி: சீர்காழி அருகே அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் ஒளி லாயம் அமைந்துள்ளது  அமைத்துள்ள ஸ்ரீ சத்குரு 18 சித்தர்கள் ஒளிலாயம் ஆலயத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்கத்தோடு பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டும் 18 சித்தர் ஆலயத்தில் காரைமேடு, தென்னலக்குடி, சூரக்காடு, அண்ணங்கோவில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.