இந்தியை தவிர்த்த தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது - கனிமொழி

இந்தியை தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். 
இந்தியை தவிர்த்த தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது - கனிமொழி
Updated on
1 min read

இந்தியை தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது இந்தித் திணிப்பு.

இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளூா் மொழிகளுக்குப் போட்டியாக இந்தி இல்லை. எந்த எதிர்ப்புமின்றி இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com