திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்ற

News image
Updated On :18 டிசம்பர் 2023, 11:15 am IST


கோவை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.

கோவையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக,முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு கோவை வந்தார்.

பின்னர் நவஇந்தியா எஸ்.என்.ஆா். கல்லூரி அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தைத் தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார். 

முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.