நெல்லை பாளையங்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கனமழை பாதிப்பு தொடர்பாகவும், முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த ஆலோசனை நடைபெற்றது.
தொடர் கனமழை காரணமாக நெல்லை மாநகரின் பெரும்பலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நெல்லை நகரிலிருந்து வண்ணாரப்பேட்டைக்குச் செல்லும் வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை மேகலிங்கபுரம் உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்துள்ளது அங்கும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில், வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



