மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

நெல்லையில் நீர் வடிந்துவிடும்: தூத்துக்குடியில் தாமதமாகலாம்!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளதாக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

News image

சிவ்தாஸ் மீனா

Updated On :18 டிசம்பர் 2023, 10:28 am IST

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்தாஸ் மீனா, 

''காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. ஒரே நாளில் 95 செ.மீ. மழை பெய்துள்ளது. வரலாறு காணாத மழையால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்திலிருந்து விமான உதவி கோரப்பட்டுள்ளது.  

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மூலம் பால், பிரட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடுவீடாகச் சென்று வழங்கப்படுகிறது. 

நெல்லையில் தண்ணீர் விரைந்து வடிந்துவிடும். தூத்துக்குடியில் தண்ணீர் வடிய தாமதமாகலாம்'' எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.