திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நெல்லையில் நீர் வடிந்துவிடும்: தூத்துக்குடியில் தாமதமாகலாம்!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளதாக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

News image

சிவ்தாஸ் மீனா

Updated On :18 டிசம்பர் 2023, 10:28 am IST

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்தாஸ் மீனா, 

''காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. ஒரே நாளில் 95 செ.மீ. மழை பெய்துள்ளது. வரலாறு காணாத மழையால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்திலிருந்து விமான உதவி கோரப்பட்டுள்ளது.  

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மூலம் பால், பிரட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடுவீடாகச் சென்று வழங்கப்படுகிறது. 

நெல்லையில் தண்ணீர் விரைந்து வடிந்துவிடும். தூத்துக்குடியில் தண்ணீர் வடிய தாமதமாகலாம்'' எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.