தூத்துக்குடியில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையம்
தூத்துக்குடி விமான நிலையம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, 3 நாள்களுக்கு பிறகு சென்னை - தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com