தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2023, 8:39 am

DIN

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி   நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னப் பிளவு, உதடு பிளவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைந்து காதலர்களுக்கு பரிசளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரையும் கடைகளுக்கும் சீல வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திக் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. புதிய ஒமைக்ரான் உருமாற்றம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவி உள்ளது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.