கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ராமேசுவரம் கோவில் பாரம்பரிய உரிமை: திமுக கூட்டணி உண்ணாவிரதம்!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரிய உரிமையை பாதுகாக்க கோரி திமுக கூட்டணி கட்சி சார்பில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஜூன் 2023, 6:34 am

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரிய உரிமையை பாதுகாக்கக் கோரி திமுக கூட்டணி கட்சி சார்பில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பாரம்பரிய உரிமையை மீட்டக் கோரி திமுக கூட்டணிக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, சி.பி.ஐ., சி.பி.எம்., மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிதப் போராட்டம் தொடங்கியுள்ளது.

ராமநாதசுவாமி கோவிலில் வெளிமாநில பக்தர்கள் கொண்டு வரும் கங்கை தீர்த்தத்தை பூஜை செய்யும் இடத்தையும் மாற்றியதை கண்டித்தும் மீண்டும் அதே இடத்தில் தொடங்க வேண்டும்.

உள்ளூர் பொதுமக்கள் கோவில் வரக்கூடிய யாத்திரைகளை சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்படிக லிங்க தரிசன கட்டணம் ரூபாய் 200 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்.

மாற்று திறனாளிகள் முதியோர்களுக்கு தரிசனம் செய்ய தனி வழி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி, குடிநீர் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக சுவாமி பள்ளக்கு தூக்கும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுப்பதோடு அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிதப் போராட்டம் மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து உண்ணப் போட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிபிஎம் தாலுகா செயலாளர் G.சிவா. சி.பி.சி.பி.ஐ. தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜீவ் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி நகர் செயலாளர் சையது இப்ராகிம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட நிர்வாக குழு முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெரோன் குமார், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், மதிமுக நகர் செயலாளர் வெள்ளைச்சாமி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.