கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ராமேசுவரம் கடற்கரைப் பகுதியில் வெடிபொருள்? 2-வது நாளாக சோதனை

ராமேசுவரம் அருகே கடற்கரையில் வெடிபொருள்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினா் அளித்த தகவலையடுத்து, போலீஸாா் இரண்டாவது நாளாக அவற்றைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

News image
Updated On :4 மே 2023, 5:23 am

DIN

ராமேசுவரம் அருகே கடற்கரையில் வெடிபொருள்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினா் அளித்த தகவலையடுத்து, போலீஸாா் இரண்டாவது நாளாக அவற்றைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள அக்காள்மடம் கடற்கரையில் வெடி பொருள்கள், தங்கம் ஆகியவை புதைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினா் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தலைமையில் உளவுத் துறை, நுண்ணறிவுப் பிரிவு , வெடிகுண்டு தடுப்புப் பிரிவு என 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் புதன்கிழமை காலை முதல் கடற்கரைப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், பல இடங்களில் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் கண்காணித்து குழிகள் தோண்டியும் ஆய்வு செய்து வருகின்றனா். 24 மணி நேரத்திற்கு மேல் தேடியும் எதுவும் கிடைக்காத நிலையில், போலீஸாா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.