சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி, தைலாங்காடு பகுதியில் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்தில் 7 ஆடுகள் உயிரிழந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.
தேவூர் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி தைலாங்காடு பகுதியில் விவசாயிகள் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் சனிக்கிழமை இரவு மர்ம விலங்கு கந்தசாமியின் 6 ஆடுகளையும், பழனிசாமியின் 1 ஆட்டினையும் கடித்தில் இறந்து விட்டன.
மேலும், அதே பகுதியில் பல்வேறு விவசாயிகளின் ஆடுகளை கடித்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. மர்ம விலங்கு கடித்தில் ஆடுகள் பலத்த காயமடைந்தும், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் திரியும் மர்ம விலங்கினை பிடிக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



