'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' குறித்து உயர்நிலைக் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் மாவட்ட வாரியாக மக்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் முக்கிய உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.