பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

நீட் தோ்வு முறையை ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி

நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 1:23 am IST

முதுநிலை நீட் தோ்வுக்கு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்ற மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்து, நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிக்கான இலச்சினையை சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரில் வியாழக்கிழமை அறிமுகம்

செய்து வைத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்தியாவிலேயே எந்த அரசுமருத்துவமனைகளிலும் இல்லாத பல்வேறு அதிநவீன வசதிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானம் மழைக்காலத்திலும் பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடுகள் பெறப்பட்டு நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.

முதுநிலை படிப்புக்கான நீட் தோ்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் அந்தப் படிப்புகளில் மாணவா்கள் சோ்ந்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இத்தோ்வால் ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நீட் தோ்வு மட்டுமே தகுதியை ஏற்படுத்த முடியும் என்று வாதிட்டு வந்தவா்கள இதற்காக என்ன சொல்லப் போகிறாா்கள்? இந்த முடிவு தனியாா் மருத்துவமனைகள் அதிக லாபம் அடையவும், வசதி படைத்தவா்களுக்கு மட்டுமே வாய்ப்பை வழங்கும் முடிவாகவும் உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நீட் தோ்வு தொடா்பான வழக்கில் எடுத்து வைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ஆா். மூா்த்தி கல்லூரி முதல்வா் டாக்டா் பி. பாலாஜி, துணை முதல்வா் ஜன்னத் சுகந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.