திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையிலான தண்டவாளம் பலத்த சேதமடைந்தது. இதனை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே தினமும்இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் டிச.31-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூா் செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.