செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருச்செந்தூா் ரயில்கள் டிச.31 வரை இயங்காது

திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :24 டிசம்பர் 2023, 3:04 am

திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையிலான தண்டவாளம் பலத்த சேதமடைந்தது. இதனை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே தினமும்இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் டிச.31-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூா் செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.