புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செப். 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி அளித்துள்ளார். 

News image
Updated On :8 ஜூலை 2023, 4:38 am

DIN

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி அளித்துள்ளார். 

நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கல்வி சுற்றுலாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் மிகவும் சேதமடைந்துள்ள பள்ளிகள் கண்டறியும் பணி முடிந்துள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கப்படவுள்ளது. இதற்காக சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.