பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியா பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.மனோஜ்குமாரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
இந்தியக் கண்டமே நாம் தமிழர் கட்சியை திரும்பிப் பார்க்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது காங்கிரஸ் கட்சி
நீட் தேர்வு விலக்குக்கு தன்னிடம் ரகசியம் உள்ளதாகக் கூறிய உதயநிதி இதுவரை அதனைக் கூறாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் நதிநீர் என்ற தேசிய உரிமையை காங்கிரஸ், பாஜக இரண்டும் பறிக்கின்றன.
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை செய்யுமாறு கெஞ்சிவிட்டு வருகிறார். அவர் புரோக்கர். ஜிஎஸ்டி ஒரு அடாவடி பொருளாதாரம்.
உழைப்பு, முதலீடு என்னுடையது, ஆனால் அதற்கு வரியை மட்டும் கேட்பது அபத்தம். மக்களிடம் பிடித்தம் செய்யப்படும் வரி, எந்தவொரு திட்டத்திலும் திரும்பக் கொடுப்பதில்லை.
வீடு கட்ட நினைத்தால் கம்பி, மணல், செங்கல் என அனைத்துக்கும் வரி கட்டுகிறோம். ஆனால் கடைசி வரை வீடு கட்டி முடிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்

சீமான் குறித்து அவதூறு யூடியூபா்கள் இருவா் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இந்தோனேசியாவின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி!
முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எதிர்ப்பு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



