திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திட்டமிட்டபடி பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

News image

பள்ளிக் கல்வித் துறை

Updated On :30 ஏப்ரல் 2024, 2:26 am IST

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனெவே அறிவித்தபடி மே 6-ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.