தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்களவைத் தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனெவே அறிவித்தபடி மே 6-ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: எட்டாவது இடத்திலிருந்து 37-ஆவது இடத்துக்கு சரிந்தது அரியலூா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



