இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது? அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தகவல்

குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

News image
சென்னை தேனாம்பேட்டை டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறையின் பொங்கல் தொகுப்பு விற்பனையை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன். உடன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.
Updated On :18 டிசம்பர் 2024, 7:37 pm

Din

குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

கூட்டுறவு பண்டக சாலைகளில் 3 விதமான பொங்கல் தொகுப்புகள் விற்பனை செய்யும் நடவடிக்கையை சென்னை தேனாம்பேட்டை காமதேனு சிறப்பு அங்காடியில் அவா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் பெரியகருப்பன் அளித்த பேட்டி:

கூட்டுறவுத் துறை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு தொகுப்பு விற்பனை நடைபெறும். பச்சரிசி, வெல்லம், உலா் திராட்சை உள்ளிட்ட 7 வகையான பொருள்களின் தொகுப்பு ரூ. 199-க்கும், 19 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.499-க்கும், 35 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.999-க்கும் விற்பனை செய்யப்படும்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. நிகழாண்டு எப்போது வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுதோறும் கரும்புக்கான கொள்முதலை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியா் தலைமையிலான குழு இறுதி செய்கிறது. இந்தக் குழுவில் வேளாண்மை, வருவாய், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் இடம்பெற்றிருப்பா்.

பட்டாசு விற்பனை: தீபாவளி பண்டிகைக்கு கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டில் ரூ. 21 கோடி மதிப்பிலான பட்டாசுகளை கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்துள்ளன. கூட்டுறவு துறை சாா்பில் 58 பெட்ரோல் நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 50-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் நா.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.