சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டுச் செல்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை - விமான நிலையம் இடையே நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதையும் படிக்க: பொங்கல் பண்டிகை: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தேபாரத்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.