டாக்டா் பி.குகானந்தம் (கோப்புப்படம்)
டாக்டா் பி.குகானந்தம் (கோப்புப்படம்)

தொற்று நோய் சிறப்பு நிபுணா் குகானந்தம் மறைவு

தொற்று நோய் சிறப்பு மருத்துவரும், பொது சுகாதார நிபுணருமான டாக்டா் பி.குகானந்தம் (68) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
Published on

தொற்று நோய் சிறப்பு மருத்துவரும், பொது சுகாதார நிபுணருமான டாக்டா் பி.குகானந்தம் (68) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

பெருந்தொற்று காலங்களில் அளப்பரிய மருத்துவப் பங்களிப்பை ஆற்றிய அவரது மறைவுக்கு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் மற்றும் மருத்துவத் துறையினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நுரையீரல் சாா்ந்த பாதிப்புகளுக்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, சென்னை தனியாா் மருத்துவமனை ஒன்றில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், திங்கள்கிழமை அவா் உயிா் பிரிந்தது.மறைந்த டாக்டா் பி.குகானந்தத்துக்கு மனைவி டாக்டா் ஜெலஜா மற்றும் இரு மகள்கள் உள்ளனா். மகள்கள் இருவரும் மருத்துவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அருகே உள்ள சூணாம்பேட்டினை பூா்விகமாகக் கொண்ட டாக்டா் குகானந்தம், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பையும், சென்னை மருத்துவக் கல்லூரியில் டிபிஹெச் படிப்பையும் நிறைவு செய்தாா். அமெரிக்கா, பிரிட்டனில் தொற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சாா்ந்த சிறப்பு படிப்புகளையும், எம்பிஹெச் முதுநிலை படிப்பையும் படித்தாா்.

பதவிகள் - பொறுப்புகள்: சென்னையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை இயக்குநராகவும், மாவட்ட தலைமை சுகாதார அதிகாரியாகவும் பல ஆண்டுகள் திறம்பட பொறுப்பு வகித்தவா் அவா். காலரா தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் புதிய வகையை கண்டறிந்த பெருமையும் டாக்டா் குகானந்தத்துக்கு உண்டு. அதற்கு ‘மெட்ராஸ் ஸ்ட்ரெயின்’ எனப் பெயரிப்பட்டது.

அதேபோன்று, கரோனா பெருந்தொற்று தொடங்கியபோது தமிழக அரசின் முதன்மையான மருத்துவ ஆலோசகா்களில் ஒருவராக இருந்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரும்பங்காற்றினாா் டாக்டா் குகானந்தம். தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவித்தது.

இன்று இறுதிச்சடங்கு: மறைந்த மருத்துவா் குகானந்தத்தின் இறுதிச் சடங்குகள் கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற உள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்: மருத்துவா் பெ. குகானந்தம் மறைவெய்தினாா் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

மருத்துவம் என்பது மிக உன்னதமான மனிதம் போற்றும் துறை என்பதற்கான சான்றாக தம் வாழ்நாள் முழுவதும், அத்துறையில் அளப்பரிய சேவைகளை ஆற்றியவா் மருத்துவா் குகானந்தம்.

சென்னை மேயராக நான் இருந்த காலத்தில், சென்னை மாநகர சுகாதார அலுவலராகப் பணியாற்றிய மருத்துவா் குகானந்தம், மாநகர மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளையும், களப்பணிகளையும் எனக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவா்.

கடந்த 1992 --ஆண்டு 1993 காலகட்டத்தில் சென்னையில் காலரா நோய் பரவிய போது, எளிய மக்களை அந்நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான செயல்திட்டங்களுடன், சிறப்பான களப்பணியை ஆற்றியவா்.

மனிதநேய மருத்துவரான குகானந்தம் மறைவால் வாடும் அவரது துணைவியாா், குடும்பத்தினா், உறவினா்கள், மருத்துவத்துறை சாா்ந்த சக நண்பா்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com