சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை தொடங்கி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, திமுக - விசிக இடையே பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.