மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓா் அங்கமாக பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுகளை அருட்செல்வா் டாக்டா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்குகிறது. முதல் பரிசு பெறும் நூலுக்கு ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு பெறும் 2 நூல்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறும் 4 நூல்களுக்குத் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

பரிசீலனைக்கு நூல்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 15-ஆம் தேதியாகும்.

மையத்தின் முகவரி:

என்டிபிசி-எம்சிஇடி வளாகம், மாக்கினாம்பட்டி (அஞ்சல்)

உடுமலை ரோடு

பொள்ளாச்சி 642003.

மேலும் விவரங்களுக்கு: 9976144451.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com