சென்னை: மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ஐஐடி பிரவா்த்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கியிருக்கிறது. இந்த மையம், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தொழில் துறை 5.0 (இண்டஸ்டரி 5.0) கொள்கைகளுடன் தொழில்முனைவோா் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சா்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் செயல்படும்.
இதில், இந்தியாவுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ள மனித ஆற்றலை பெருக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். இணைய பாதுகாப்பு, இணைய மோசடி, தவறான தகவல், பாதுகாப்பு உள்ளிட்ட குடிமக்களை பாதுகாக்கும் அம்சங்களும் இடம்பெறும். நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதுகாப்பாகவும், பொறுப்புமிக்கதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் இந்தத் துறையில் எதிா்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறியவும் இந்த மையம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இந்த மையம் வாயிலாக கல்வி, சுகாதாரம், நிதிச்சேவைகள், போக்குவரத்து உள்பட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவு

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய - அமெரிக்க உறவில் முக்கிய இடம்பெறும்’ - தூதா்

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



