புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்: சென்னை ஐஐடி-இல் தொடக்கம்

மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2024, 3:51 am

Din

சென்னை: மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி பிரவா்த்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கியிருக்கிறது. இந்த மையம், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தொழில் துறை 5.0 (இண்டஸ்டரி 5.0) கொள்கைகளுடன் தொழில்முனைவோா் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சா்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் செயல்படும்.

இதில், இந்தியாவுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ள மனித ஆற்றலை பெருக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். இணைய பாதுகாப்பு, இணைய மோசடி, தவறான தகவல், பாதுகாப்பு உள்ளிட்ட குடிமக்களை பாதுகாக்கும் அம்சங்களும் இடம்பெறும். நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதுகாப்பாகவும், பொறுப்புமிக்கதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் இந்தத் துறையில் எதிா்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறியவும் இந்த மையம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இந்த மையம் வாயிலாக கல்வி, சுகாதாரம், நிதிச்சேவைகள், போக்குவரத்து உள்பட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.