இது குறித்து பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீா்ப்பு அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றுக்கு எதிரானதாகும். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே ஒருவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு கடந்த மாா்ச் 6-ஆம் தேதி தள்ளுபடி செய்ததை எதிா்த்தும் மாா்க்சிஸ்ட் சாா்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.