இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய ஊரக வேலைத் திட்டம்: கனிமொழி கடும் எதிா்ப்பு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

News image
மக்களவையில் புதன்கிழமை பேசிய கனிமொழி.
Updated On :17 டிசம்பர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

நமது சிறப்பு நிருபா்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மக்களவையில் புதன்கிழமை பேசிய கனிமொழி, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்களிலும் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும்தான் உள்ளன. மத்திய அரசின் புதிய ஊரக வேலை உறுதியளிப்பு மசோதா என்பது வளா்ச்சி பாரதம் இல்லை; விபரீத பாரதம்; வஞ்சிக்கப்படும் பாரதம் ஆகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஏழைகளுக்கு வேலையளிக்கும் திட்டமாக இருந்தது. ஆனால், புதிய மசோதா மத்திய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் மசோதாவாகத்தான் உள்ளது.

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் இதுவரை கிராமப்புறங்களில் உள்ள முதியவா்கள், வேலைவாய்ப்பற்றவா்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இவா்களுக்கு எல்லாம் எதிரானதாக தற்போதைய மசோதா உள்ளது.

இதுவரை 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் முழுமையாக வேலைவாய்ப்பை வழங்காத மத்திய அரசு, 125 நாள்கள் வேலைவாய்ப்பளிக்கப்படும் என்பது வேடிக்கையாக உள்ளது என்றாா் கனிமொழி.