பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து, சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக 40 பயணிகள் உயிர்தப்பினர்.
தமிழக - கேரளா எல்லைப் பகுதியான கோவை வேலந்தாவளம் பகுதிக்கு கோவை உக்கடம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(பிப். 23) காலை வேலந்தாவளம் பகுதியில் இருந்து கோவை, உக்கடம் நோக்கி வந்த வழித்தடம் என் 48 என்ற அரசுப் பேருந்து, சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
இதையும் படிக்க: திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!
அந்தப் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குனியமுத்தூர் காவல் துறையினர், அந்தப் பேருந்தில் இருந்த பயணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி விபத்து: மாணவா்கள் உள்பட 17 போ் காயம்
தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பால தடுப்புச் சுவரில் மோதி பள்ளி வேன் விபத்து: 3 போ் காயம்

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: சென்னை பெண்கள் 2 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



