எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நெகிழ்ச்சி சம்பவம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர் குறித்து...

News image

20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்.

Updated On :1 ஜூலை 2025, 6:15 pm IST

பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.

சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிகாரைச் சேர்ந்த ஒரு நபர், திருநெல்வேலியில் உள்ள சோயா டிரஸ்ட் (Soya Trust) என்ற தன்னார்வ அமைப்பின் தொடர் முயற்சியால் இன்று(ஜூலை 1) தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, அங்கிருந்தோர் அனைவருக்கும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பலேஷ்வர் யாதவ் என்ற இந்த நபர், 2005 ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு, இவர் 2022 ஆம் ஆண்டு சிவகங்கையில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள சோயா டிரஸ்ட் காப்பகத்தில் ஆதரவற்று சேர்க்கப்பட்டார்.

சோயா டிரஸ்டின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான சாரதா, மாரிமுத்து மற்றும் டேவிட் ஆகியோர் அடங்கிய குழு, பலேஷ்வர் யாதவின் குடும்பத்தினரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டது.

பிகார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல் போன மற்றொரு நபராகிய சனோஸ் குமார் குறித்த தேடலின் போது, பலேஷ்வர் யாதவ் பற்றிய தகவல்கள் சோயா டிரஸ்டின் மூலம் கிடைத்தன.

பலேஷ்வர் யாதவ் பிகாரின் செர்க்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது உறவினர் அனில் யாதவ் என்பவர் சேலத்தில் உள்ள ஒரு காப்பர் வயர் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அனைத்து ஆய்வுகளும் முடிக்கப்பட்டு, இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் பலேஷ்வர் யாதவ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சோயா டிரஸ்ட் அமைப்பின் அர்ப்பணிப்புள்ள பணியையும், மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு அவர்கள் ஆற்றிவரும் சேவையையும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் பாராட்டினார். இத்தகைய மனிதாபிமானப் பணிகள் சமூகத்தில் மேலும் பரவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Summary

A heartbreaking incident has taken place in Tirunelveli where a mentally challenged man from Bihar was reunited with his family after 20 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.