கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் சேவையை இணைக்கும் மையம்; பட்டாபிராமுக்கு மெட்ரோ ரயில்

கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் சேவையை இணைக்க பன்முக மையம் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு
பன்முக மையம் - பிரதிபடம்
பன்முக மையம் - பிரதிபடம்
Published on
Updated on
1 min read

கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்,

சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே ரூ.9335 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.

கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும்.

சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் தடம் வரும் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.

உதகை, கொடைக்கானலில் ரோப் வே திட்டத்தை ஏற்படுத்தவும் ஆய்வு.

போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்துத் துறையில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com