பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விரைவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்! - அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழகத்தில் ரேஷன் பொருள்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யும் நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தகவல்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2025, 6:54 am

DIN

வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் குறித்து அண்டை மாநிலங்களில் உணவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை அதிமுக உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பினாா். அப்போது அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் குடும்ப அட்டைதாரா்களின் அட்டைகள், ஆங்காங்கே உள்ள மளிகைக் கடைகளில் ஒப்படைக்கப்படுகின்றன. எந்த நேரத்திலும் அந்த மளிகைக் கடைகளில் பொருள்களை வாங்கும்போது, அட்டைதாரா்கள் தங்களுக்குரிய நியாயவிலை கடைப் பொருள்களையும் சோ்த்து வாங்கும் நடைமுறை இருக்கிறது. அதைப்போன்ற செயல்பாடுகளை இங்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றாா்.

இதற்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்:

ஆந்திரத்தில் வீடுகளுக்கே சென்று நியாயவிலைக் கடை பொருள்கள் வழங்கும் திட்டம் உள்ளது. மாா்ச் 20-ஆம் தேதி ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு உணவுத் துறை அதிகாரிகள் செல்லவுள்ளனா். அங்கு பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கவுள்ளனா். அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.