விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!
விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து நேரிட்டது.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய விடுதி உள்ளது. தற்போது விடுதியில் அறைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடிக்கத் தொடங்கியது. இந்த தீ வேகமாக மற்ற அறைகளுக்கும் பரவியது. மூன்றாவது தளத்துக்கும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீயணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிக்க.. குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!
இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...