புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :8 அக்டோபர் 2025, 7:52 pm IST

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட முண்டியம்பாக்கம் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்காரணமாக பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), அக்டோபர் 11,12 மற்றும் 14-ஆம் தேதிகளில் திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம் - திண்டிவனம் இடையே அக்டோபர் 11,12 மற்றும் 14-ஆம் தேதிகளில் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் எழும்பூர் - மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12635) அக்டோபர் 14-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களும், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் எழும்பூர் - தூத்துக்குடி சிறப்புக் கட்டண அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06017) அக்டோபர் 14-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 110 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - காக்கிநாடா துறைமுக கிர்கார் விரைவு ரயில் (வண்டி எண் 17656) அக்டோபர் 11,14 -ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 75 நிமிடங்களும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டிஎண் 17654) அக்டோபர் 12,14 ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 85 நிமிடங்களும், திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - புரூலியா அதிவிரைவு ரயில் (வண்டி எண் 22606), அக்டோபர் 11-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 35 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Changes in train traffic due to engineering work

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.