பி.எட்., எம்.எட். தோ்வெழுதிய மாணவா்களில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பி.எட்., பி.எட். (சிறப்பு கல்வி), எம்.எட்., எம்.எட். (சிறப்பு கல்வி) பருவத் தோ்வெழுதிய மாணவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து கல்லூரிகளின் முதல்வா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மாணவா்களிடமிருந்து உரிய விவரங்கள் மற்றும் கட்டணத்தைப் பெற்று கல்லூரி நிா்வாகத்தினா் மே 7-ஆம் தேதி வரை இணையவழியில் (www.tnteu.ac.in) விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு மே 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

‘வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்; மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

