ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

ஆன்லைனில் மதுபானம் டெலிவரி? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

ஆன்லைனில் மதுபான விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

News image

அமைச்சர் விக்னேஷ்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:56 pm IST

ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு செய்தவர்களுக்கு வீடுதேடி மதுபானம் கொடுக்கப்படுமா? என்பது குறித்து மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, இணையதளத்தில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்றும், வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான செய்தி எனவும் குறிப்பிட்டார்.

21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானம் கிடையாது; கடைக்குச் சென்று தான் வாங்க வேண்டும் என்பதால் வயது உறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் விளக்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது:

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கும் நடைமுறை இன்றுமுதல் அமலாகியுள்ளது. ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆன்லைனிலேயே ரசீது வழங்கப்படும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானத்தை வாங்க முடியும். வீடு தேடி மதுபானம் கொண்டுசேர்க்கப்படும் என்பது வதந்தி.

எல்லா நிறுவனங்களின் மதுபானங்களும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார செலவு, கடை வாடகை போன்றவற்றைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி மதுபானம் வரும் எனக் கூறுவது தவறு. ஊழலைக் குறைத்தாலே அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை.

தவெக ஆட்சியில்தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு ஆட்சியிலும் நடவடிக்கை எடுக்கவில்லை

மதுபானங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என விக்னேஷ் குறிப்பிட்டார்.

Summary

Online home delivery of liquor Minister Vignesh clarifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.