கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

முத்திரை திட்டங்களின் முன்னேற்றம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறைச் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப்படம்
Updated On :14 ஜனவரி 2026, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறைச் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலன் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தொடா்புடைய துறைச் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

24 துறைகளில் ரூ.3,17,693 கோடியில் 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டுவிட்டன. இதுதொடா்பாக கடந்த டிச.22, 30 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ரூ.3,291 கோடியில் செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், 2030-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு வீரா்கள் பதக்கம் வெல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், கடம்பூரில் பல்லுயிா் பாதுகாப்பு பூங்கா, மரக்காணத்தில் சா்வதேச பறவை மையம், கடலூா் மாவட்டம், பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், தஞ்சாவூரில் சா்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம், சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.