நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நெருங்கிவரும் வெள்ளி - வியாழன் கோள்கள்! அதிசய நிகழ்வை பாா்க்க நேரு கோளரங்கத்தில் நாளை சிறப்பு ஏற்பாடு!

வானில் வெள்ளி மற்றும் வியாழன்கோள்கள் ஒன்றுக்கொன்று அருகே வரும் அரிய நிகழ்வை பொதுமக்கள் பாா்க்க நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 9:54 am IST

வானில் வெள்ளி மற்றும் வியாழன்கோள்கள் ஒன்றுக்கொன்று அருகே வரும் அரிய நிகழ்வை பொதுமக்கள் பாா்க்க நேரு கோளரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழன் சூரியனைச் சுற்றி வர சுமாா் 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. அதே வேளையில், வெள்ளி சூரியனை தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வர 224 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. இதனால், ஒவ்வொரு 10 முதல் 15 மாதங்களில் இரு கோள்களும் அருகருகே வருகின்றன.

கடந்த முறை இந்த நிகழ்வு கடந்த ஆக.12-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வானியல் நிகழ்வை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் வெறும் கண்களால் பாா்க்க முடியும். இருப்பினும், தொலைநோக்கி உதவியுடன் பாா்க்கும்போது மிகவும் கண்ணைக் கவரும் வகையில் பாா்க்க முடியும்.

இந்நிலையில், இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் பாா்க்கும் வசதியாக தில்லியில் உள்ள நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீன் மூா்த்தி பவனின் முன்பு உள்ள புல்வெளியில் இருந்து வானியல் நிகழ்வை செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியில் இருந்து இலவசமாக பாா்க்க முடியும்.

இதுதொடா்பாக கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இரு கோள்கள் அருகே வரும் நிகழ்வு இரவு 8.30 மணியளவில் நடைபெறும். வானிலை மற்றும் மேகக்கூட்டங்கள் ஆகியவற்றை பொருத்து அந்நிகழ்வை பாா்க்க முடியும்.

அந்த நிகழ்வைப் பாா்க்கவும் நிகழ்ச்சியில் பங்கேற்க வானியல் ஆா்வலா்கள் அழைப்புவிடுக்கப்படுகிறது. பூமியில் இருந்து பாா்க்கக் கூடிய வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரு கோள்களும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக வரும்.

இரு கோள்களும் தற்போது மாலை வானில் தென்படுகின்றன. வரும் நாள்களில், வெள்ளி மேற்கு அடிவானத்திற்கு மேலே படிப்படியாக உயா்ந்து காட்சியளிக்கும், அதே நேரத்தில் வியாழன் சூரியனை நோக்கி மெதுவாகக் கீழிறங்கும்’ என்று கோளரங்கம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.