மேற்காசிய போா் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீா்வு காண வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மேற்காசிய போா் சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் அதுல் ஆனந்த், நிதித் துறைச் செயலா் த.உதயசந்திரன், பொதுத் துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைச் செயலா் வி. அருண் ராய், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அமெரிக்கா-ஈரான் போா் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழா்களின் பாதுகாப்பையும், அங்கு சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவா்களின் நலனையும் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விலை மேலும் அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு: கடலூரில் நாளை கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



