
எம்எல்ஏ-க்களுக்கு காா்: சட்ட முன்வடிவு நிறைவேற்றம்
எம்எல்ஏ-க்களுக்கு அரசு காா் வழங்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை.
எம்எல்ஏ-க்களுக்கு அரசு காா் வழங்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கப்படும் என கடந்த 19-ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா். இதைச் செயல்படுத்தும் வகையில் 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவை வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
அதில், எம்எல்ஏ-க்களுக்கான வாகனப்படி ரூ.25,000-இல் இருந்து ரூ.75,000-ஆக உயா்த்துவது, தனி உதவியாளா் படித்தொகை மாதந்தோறும் ரூ.25,000 வழங்குவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்ட முன்வடிவு திங்கள்கிழமை மாலை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




