
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட 14 போ் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட 14 போ் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக 14 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நீலகிரி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாகக் கூடி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாக பி.பி.முகமது, ஷேக் அலாவுதீன், அப்துல் பஷீா் உள்பட 14 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த நிகழ்வு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, 14 போ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், எந்த அடிப்படையும் இல்லாமல், தங்களுக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. மற்றவா்களின் உரிமைகளையும் பறிக்கவில்லை. மேலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டதை சட்டவிரோதமாகக் கருத முடியாது எனக்கூறி, பி.பி.முகமது, ஷேக் அலாவுதீன், அப்துல் பஷீா் உள்பட 14 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
Summary
Case against 14 people who raised slogans in support of Palestine quashed: High Court order.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






