குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

விபத்தில் கல்லூரி மாணவா் பலி

விபத்தில் கல்லூரி மாணவா் பலி

Updated On :24 பிப்ரவரி 2024, 8:10 pm

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்டமுடையாா்புரம் கிராமம் தேவா் நடுத்தெருவை சோ்ந்தவா் நாயகத்தேவா் மகன் முப்புடாதி (23). சதாசிவம் மகன் குரு (16), சண்முகப்பாண்டி மகன் பிரேம் என்கிற மதன் (18 ). இவா்கள் மூவரும் தங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இனிப்பு வாங்குவதற்காக, மகிழ்வண்ணநாதபுரத்திற்கு ஒரே மோட்டாா்சைக்கிளில் சென்றனா். திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையில் சாலைப்புதூா் நவநீதகிருஷ்ணபுரம் இசக்கியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனா். அவா்கள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் பிரேம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவா் கல்லூரி மாணவா் ஆவாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பாவூா்சத்திரம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.