சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் மக்கள் அவதி

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
திருவள்ளுவா் சாலையில் இரவில் திரிந்த மாடுகள்.
Updated On :24 ஜூன் 2024, 9:53 pm

Din

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலை, திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, வடக்கு ரத வீதி பகுதிகளில் சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இரவு பகலாக சுற்றித் திரிகின்றன. சாலையின் நடுவே அவை படுத்துக் கிடப்பதாலும், ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதாலும் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.